Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் ஐந்து அதிரடி நடவடிக்கைகள்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (08:08 IST)
திமுக அரசு பதவியேற்று ஒரு மாதம் தான் ஆகியுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறித்து பார்த்து வருகிறோம். குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தினந்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு அறிவிப்பும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளும் திருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அறநிலையத்துறை என்றாலே அமைதியாக இருக்கும் துறை என்று இதுவரை இருந்த நிலையில் தற்போது அந்த துறையிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன
 
அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் இந்த ஒரே மாதத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கைகளை குறித்து பார்ப்போம். இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் கோவில் சொத்துக்கள் இணையதளத்தில் வெளியிடுவது என்பது இதுவரை பேச்சளவில் இருந்த நிலையில் அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்த 100 நாட்களில் பிற ஜாதியினர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்காகவும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments