Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்திவரதரால் அரசு பள்ளிகள் விடுமுறை- நாளை கடைசி நாள்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (13:09 IST)
அத்திவரதரின் சயனக்கோல தரிசனம் நாளையோடு முடிவடைவதால் பக்தர்கள் லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றனர்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அதிசய நிகழ்வான அத்திவரதர் வைபவம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் விமரிசையாக நடந்து வருகிறது. ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த தரிசனம் ஆகஸ்டு 17 வரை நடைபெறும். ஜூலை 31 வரை சயனக்கோலத்தில் தரிசனம் தரும் அத்திவரதர், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார்.

நாளையோடு சயனக்கோல தரிசனம் முடிவடைவதால் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். இதனால் நாளை மதியம் 12 மணிக்கெல்லாம் நடை அடைக்கப்பட்டு தரிசனத்திற்கு வந்தவர்கள் 5 மணிக்குள் தரிசனம் முடிந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுவதால் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வி.வி.ஐ.பி அட்டை வைத்திருப்பவர்கள் நாளை மாலை 3 மணிவரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி அட்டை வைத்திருப்போர் பகல் 12 மணி வரையிலும், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 12 மணி தொடங்கி 3 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவர்.

ஆடிப்பெருக்கு அன்றே ஆடிப்பூரமும் வருவதால் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது. ஆதலால் ஆகஸ்டு 3ம் தேதி மதியம் 3 மணிமுதல் 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றிரவு 8 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரையிலும் அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments