Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவ தயார்: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (14:11 IST)
இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உதவி செய்ய தயார் என மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
 
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதாவது இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்வது குறித்து பேசப்பட்டது. 
 
மேலும் இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் அதிக முதலீடு செய்ய பிரதமர் மோடி சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் இதனை பரிசீலனை செய்வதாக சத்ய நாதெல்லா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்
 
ஏற்கனவே இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் உதவியால் அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments