Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது
, வியாழன், 26 நவம்பர் 2015 (10:49 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியையை எட்டியுள்ளது. அணைக்கு 6,925 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


 

 
தமிழகத்தின் பெரிய அணையாகிய மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
 
தற்போது அந்த அணையின் நீர் மட்டம் 90.32 கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 6,925 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
 
அணையின் நீர் இருப்பு 53.01 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாக உள்ளது.
 
பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம் 120 அடி, இதன் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சியாகும்
 
கடந்த 2 வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்திலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil