Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்த நீர்வரத்து! வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (12:58 IST)
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் கபிணி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் நுகு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு 1,23,000 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 1 லட்சம் கோடி கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 50 அடியிலிருந்து 75.83 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments