நாளை மே தின விடுமுறை நாள்: சென்னை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (17:04 IST)
நாளை மே தினம் விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அரசு விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயில்கள் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நாளை விடுமுறை தினத்தை சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளைய தினம் நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
 
அதேபோல் இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் உடையும்: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்?!.. பாஜக மூவ்!.. அரசியலில் அதிரடி திருப்பம்!..

கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருக்கும் ராமதாஸ் - பிரேமலதா.. எந்த கூட்டணியில் இணைவார்கள்?

ஒரு ரூபாய் கொடுத்தால் ஆப்பிள் ஐபோன்.. இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.. உண்மை தானா?

தவெக ஆட்சிக்கு வந்தா விஷம் குடிச்சி சாகணும்!.. கோபப்பட்ட கருணாஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments