Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மெட்ரோ சேவை ரத்து!!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (17:10 IST)
வரும் மார்ச் 22 ஆம் தேதி சென்னை மெட்ரோ இயங்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ரன. 
 
இந்நிலையில் நேற்று மக்களிடையே தொலைக்காட்சி வழியாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதுகாப்பு ஒத்திகையாக எதிர்வரும் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு விதிமுறையை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
இதனை ஏற்றுக்கொண்டு தமிழக வணிகர் சங்கமும், பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுய ஊரடங்கு ஒத்துழைக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது மெட்ரோ நிர்வாகம் சுய ஊரடங்கு அறிவித்துள்ளதால் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments