Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு-நேருபூங்கா மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் எப்போது?

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (05:53 IST)
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேட்டில் இருந்து சின்னமலை வரையிலான சேவை நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில்  அடுத்தகட்டமாக, கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ பணிகள் முடியுந்தருவாயில் இருப்பதால் இந்த சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



 கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கப்பாதைப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் நேரு பூங்கா முதல், கோயம்பேடு வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் பொது மேலாளர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், 8 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட உள்ள சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயில் சந்திப்பு நிலையமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில்களும் திறந்துவிட்ட பின்னர் சென்னையில் டிராபிக் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments