Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீத்தேன் திட்ட போராட்டக்காரர்களை சந்திக்க தமிழக முதல்வர் ஒப்புதல்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (07:43 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டக் குழுவினர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மார்ச் 1-ம் தேதி சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது




மத்திய அரசின் திட்டமான ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுக்கும் திட்டத்திற்கு நெடுவாசல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பிரச்னை தொடர்பாக, நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அனுமதி கேட்டதாகவும், அவர்களை வருகிற மார்ச் 1-ம் தேதி முதல்வர் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த சந்திப்பின்போது மத்திய அரசை முதல்வர் இந்த திட்டம் வேண்டாம் என வலியுறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கையாக வைக்கவுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுக்கும் திட்டத்தின் மூலம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பது இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

ஆகஸ்ட் 1 முதல் சில ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் செயல்படாது.. இந்த பட்டியலில் உங்கள் போன் இருக்கிறதா?

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

பொறியியல் கல்லூரியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம்.. அரசின் அதிரடி முடிவு..!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments