Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:02 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் 
 
குறிப்பாக தென் மாவட்டத்தில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மையம் அறிவித்து அறிவிப்பு ஒன்றின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments