Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளப்புகளுக்கு வெளியில் இனி மது எடுத்து செல்லலாம் – எவ்ளோ தெரியுமா ?

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (07:38 IST)
தமிழகத்தில் உள்ள தனியார் கிளப்புகளுக்கு இனி மது வகைகளை எடுத்து செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளுக்கு செல்லும் அதன் உறுப்பினர்கள் வெளியில் இருந்து மது வகைகளை எடுத்து செல்லக் கூடாது என கடந்த 2010 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கிளப் உறுப்பினர்கள் எந்தெந்த மது வகைகளை எவ்வளவு கொண்டு செல்லலாம் எனவும் வரையறுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுவகைகள் ஆகியவற்றை 4.5 லிட்டரும் பீர் வகைகள் என்றால்  7.8 லிட்டரும் வொயின் வகைகள் என்றால் 9 லிட்டரும் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments