அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் - முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (09:27 IST)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.


 

 
அதிமுகவின் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர். 
 
இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஏனெனில், ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடி அணியுடன் சமீபத்தில் இணைந்த போது, அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா அப்பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார். அதிமுகவின் பொதுக்குழு விரைவில் கூட்டப்பட்டு அதுபற்றி அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தார். 


 

 
எனவே, பொதுக்குழு கூடுவதற்கான தேதி இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அநேகமாக, செப்டம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் பொதுக்குழு கூட்டப்படும் எனத் தெரிகிறது. 
.
அதோடு, டிடிவி தினகரன் நியமித்த நிர்வாகிகளின் நியமனம் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரின் நியமனங்கள் செல்லாது என இன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments