Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீராமிதுன் மீண்டும் கைது: கொலை மிரட்டல் வழக்கில் சிக்கினார்

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:18 IST)
நடிகை மீரா மிதுன் ஏற்கனவே பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மீராமிதுன் ஜாமின் மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொலை மிரட்டல் வழக்கில் நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் கைது நடவடிக்கை பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து நடிகை மீரா மிதுன் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments