Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனுக்கு ஊசி போட்ட மெடிக்கல் கடை உரிமையாளர். மாணவன் உயிரிழந்ததால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (12:46 IST)
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மெடிக்கல் கடை உரிமையாளர் மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போட்டுள்ள நிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் கீர்த்திவாசன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கீர்த்தி வாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து அருகில் இருந்த மெடிக்கல் கடையில் மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்த நிலையில், மெடிக்கல் கடை நடத்தி வரும் செந்தில் குமார் என்பவர், கீர்த்தி வாசனுக்கு ஊசி போட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் மீண்டும் மாணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கீர்த்தி வாசன் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து மெடிக்கல் கடை உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments