Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30% மானியம், மேலும் பல... எடப்பாடியாரின் அதிரடி அறிவிப்புகள்!!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (09:55 IST)
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் எனவும் இதோடு பல சலுகை அறிவிப்புகளையும் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு... 
 
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கப்பட்டால் சலுகை. 
 
மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலட்தனமாக 30% மானியம் வழங்கப்படும். 
 
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் மூலதனக் கடனிற்கான வட்டியில் 6% மானியமாக வழங்கப்படும். 
 
மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100% முத்திரை தாள் கட்டண விலக்கு வழங்கப்படும். 
 
அடுத்த 4 மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ பொருட்களில் 50% தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும். 
 
குறுகியம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிட்கோ மூலம் நிலம், கூடாரங்கள் வழங்கப்படும். 
 
சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகை பொருந்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments