Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை வாதத்தை இருட்டடிப்பு செய்யும் முன்னணி ஊடகங்கள்..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (16:23 IST)
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்து வரும் நிலையில் அவரது வாதம் குறித்த செய்திகளை முன்னணி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதாக கூறப்படுகிறது. 
 
செந்தில் பாலாஜி வழக்கில் அவரது மனைவி மேகலா தரப்பில் வாதிட்ட என்.ஆர். இளங்கோ அவர்களின் வாதத்தை வரிக்கு வரி அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. 
 
ஆனால் அதே நேரத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்டு வரும் துஷார் மேத்தாவின் கருத்துக்களை பெரிய ஊடகங்கள் பெட்டி செய்தியாக கூட வெளியிடவில்லை என்று பொதுமக்கள் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 
 
இதிலிருந்து ஊடகங்கள் ஒரு சார்பாக இருப்பது தெரியவந்துள்ளது என்றும் ஊடகங்கள் நடுநிலை உடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். 
 
அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் என்ன வாதம் செய்தார் என்பதே தெரிந்து கொள்ள முடியாதபடி மக்களுக்கு முன்னணி ஊடகங்கள் செய்தியை மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments