Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தரை மோசமாக தாக்கும் மதிமுக தொண்டர்: அமைதியாக வேடிக்கை பார்த்த வைகோ

Webdunia
சனி, 14 மே 2016 (12:06 IST)
கோவில்பட்டியில் மதிமுக தொண்டர் ஒருவர் கோயிலுக்கு வந்த தொடரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துள்ளார் வைகோ.


 
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் அவர் போட்டியிடாமல் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளராக இருந்த விநாயகா ரமேஷை அந்த தொகுதியில் போட்டியிட வைத்தார் வைகோ.
 
இந்நிலையில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து கோவில்பட்டியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்ய வந்தார் வைகோ. கோவில்பட்டி பத்ரகாளி அம்மன் கோவில் அருகே ஒரு இரு சக்கர வாகனம் வைகோவின் வாகனம் முன்னேறி செல்லமுடியாத வகையில் நிறுத்தப்பட்டிருந்தது.
 
கோவிலுக்குள் இருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய பக்தரை மதிமுக தொண்டர் ஒருவர் வெளியே அழைத்து வந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. திடீரென மதிமுக தொண்டர் அந்த பக்தரை கடுமையாக ஓங்கி அறைந்தார்.
 
மதிமுக தொண்டர் தாக்கியதில் கடுமையாக பாதிக்கப்பட்டார் அந்த பக்தர். ஆனால் இந்த சம்பவத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த வைகோ தனது கட்சி தொண்டரை தடுக்கவில்லை. மாறாக தனது கட்சி தொண்டர் பக்தர் ஒருவரை கடுமையாக தாக்குவதை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments