Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

Mahendran
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (16:24 IST)
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கட்சித் தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதிமுக, "மகன் திமுகவாக" மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இதனை எதிர்த்து நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். நீண்ட காலமாகவே மதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
 
காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கு எதிராக பேசினார்.
 
வரும் செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
தான் இன்னும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், அடுத்தகட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தச் சம்பவம், மதிமுகவில் நிலவி வரும் பிளவை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments