Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல் கலாமுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி

அப்துல் கலாமுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி
, புதன், 29 ஜூலை 2015 (23:19 IST)
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.
 

 
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் உடல் ராமேஸ்வரத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கலாமுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
மேலும், அப்துல் கலாம் அவர்களின் குடும்பத்தினரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, ரமேஸ்வரத்தில் தங்கியிருந்தார்.
 
வழக்கம் போல், இன்று காலை நடை பயிற்சி சென்றுவிட்டு வரும் வழியில், சந்திரசேகர் என்ற கூலித்தொழி வைகோவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, தனது இல்லத்துக்கு வந்து தேநீர் அருந்த வேண்டும் என்றார்.
 
அவரது அன்பான கோரிக்கையை ஏற்று அவரது இல்லம் சென்று வைகோ தேநீர் அருந்தினார். பின்பு, அவர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தக் கொண்டார். 
 

Share this Story:

Follow Webdunia tamil