Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ மறுமலர்ச்சிப் பயணம் துவக்கம்

மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ மறுமலர்ச்சிப் பயணம் துவக்கம்
, வியாழன், 24 செப்டம்பர் 2015 (03:15 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற விடியல் பயணத்தை துவக்கியுள்ளார். இதற்கு போட்டியாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்  மறுமலர்ச்சிப் பயணம் என்ற பயணத்தை தொடங்க உள்ளார்.
 

 
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி  தலைமையில், கலிங்கப்பட்டியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி, அக்டோபர் 3 ஆம் தேதி காலை 9 மணி காஞ்சிபுரம் மாவட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்தில் இருந்து வைகோவின் மறுமலர்ச்சிப் பயணம் வேன் பிரச்சாரமாக தொடங்குகிறது.
 
இதனையடுத்து, அக்டோபர் 03 ஆம் தேதி மற்றும் 04 ஆம் தேதியில்  காஞ்சிபுரம் மாவட்டத்திலும், அக்டோபர் 09 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதி கரூர் மாவட்டதிலும், அக்டோபர் 14 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி மதுரை புறநகர் மாவட்டதிலும், அக்டோபர் 17 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும், அக்டோபர் 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி நெல்லை புறநகர் மாவட்டதிலும், அக்டோபர் 21 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதி குமரி மாவட்டதிலும், அக்டோபர் 31 ஆம் தேதி மற்றும் நவம்பர் 01 ஆம் தேதி விருதுநகர் மாவட்டதிலும், நவம்பர் 02 ஆம் தேதி மற்றும் 03 ஆம் தேதி தஞ்சை மாவட்டதிலும், நவம்பர் 04 ஆம் தேதி மற்றம் 05 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திலும், நவம்பர் 11 ஆம் தேதி மற்றும்  12 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டதிலும் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
 
வைகோவின் இந்த பயணம் மதிமுகவினர் மத்தியில் உற்சாகத்தையும்,  திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil