Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதா? சென்னை மேயர் ப்ரியா விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (11:19 IST)
சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
 
இதுகுறித்து, அந்த நிகழ்ச்சிக்கு வந்த மேயர் பிரியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, “சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த ப்ளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். புகார் குறித்தும், ப்ளீச்சிங் பவுடரின் தரம் குறித்தும் உரிய விசாரணை நடைபெறும்,” என தெரிவித்தார்.
 
ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை முன்னிட்டு, மேயர் பிரியா உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments