Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதியில்லாத எங்களிடம் ஏன் வாக்கு கேட்டு வந்தீங்க.. மேயர் பிரியாவிடம் சரமாரி கேள்வி கேட்ட பெண்கள்..!

Siva
வெள்ளி, 29 மார்ச் 2024 (07:13 IST)
நிவாரணம் பெற தகுதி இல்லை என்று எங்களை ஒதுக்கிய நீங்கள் எதற்காக எங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என மேயர் பிரியாவிடம் கொளத்தூர் பகுதி பெண்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருவரும் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு கூடிய பெண்கள் சென்னையில் வெள்ளம் வந்த போது நிவாரணம் பெற தகுதி இல்லாதவர்கள் என எங்களை ஒதுக்கிய உங்களுக்கு எதற்காக நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பெண்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 840 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரண டோக்கன் வழங்கியதாகவும் மற்றவர்களிடம் எங்கள் கட்சிக்கு பிடித்தாயா? கோஷம் போட்டாயா? என்று ஏக வசனத்தில் பேசி நிவாரணம் பெற நீங்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்று கூறியதாகவும் பெண்கள் குற்றம் காட்டினார்.

நாங்கள் கஷ்டப்படும் போது கண்டு கொள்ளாத நீங்கள் இப்போது வாக்கு கேட்டு மட்டும் ஏன் வருகிறீர்கள் என பெண்கள் ஆவேசமாக கேள்வி கேட்டதை அடுத்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ப்ரியா, அவர்களை சமாதானப்படுத்தி அந்த பகுதியில் இருந்து சென்றனர். இந்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments