பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை! – சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (15:31 IST)
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை இணைப்பதற்கான சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.



கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயம் அதிகம் நடைபெறும் டெல்டா பாசன பகுதிகளில் ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் ஆய்வுகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதை தடை செய்யும் வகையில் விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டுமென கூறப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் மயிலாடுதுறையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைப்பதற்கான சட்ட முன் வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மயிலாடுதுறையிலும் இனி ஷெல், ஹைட்ரோகார்பன், விவசாயம் அல்லாத பணிகளுக்கான துளையிடுதல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை நிறுவ முடியாது என்பது குறிப்பிட தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments