Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை! – சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (15:31 IST)
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை இணைப்பதற்கான சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.



கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயம் அதிகம் நடைபெறும் டெல்டா பாசன பகுதிகளில் ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் ஆய்வுகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதை தடை செய்யும் வகையில் விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டுமென கூறப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் மயிலாடுதுறையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைப்பதற்கான சட்ட முன் வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மயிலாடுதுறையிலும் இனி ஷெல், ஹைட்ரோகார்பன், விவசாயம் அல்லாத பணிகளுக்கான துளையிடுதல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை நிறுவ முடியாது என்பது குறிப்பிட தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட மூவர் கைது..!

மின்வெட்டு என புகார் கொடுக்க வந்த குடியிருப்பாளர்கள்: கட்டையை எடுத்து தாக்கிய பாதுகாவலர்கள் .. அதிர்ச்சி சம்பவம்..

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments