Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா ஆட்சியில் குறைகள் - சொந்த கட்சிக்கே சூன்யம் வைத்த ராமராஜன்!..

ஜெயலலிதா ஆட்சியில் குறைகள் - சொந்த கட்சிக்கே சூன்யம் வைத்த ராமராஜன்!..
, வியாழன், 31 மார்ச் 2016 (15:17 IST)
ஜெயலலிதா ஆட்சியில் பல குறைகள் நடந்திருக்கலாம். அதையெல்லாம் யாரும் பெரிதாக நினைக்கக் கூடாது என்று அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசியதை அடுத்து அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அதிமுக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளரும், மதுரை மேயருமான ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தலைமைக் கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன், “ஜெயலலிதா ஆட்சியில் பல குறைகள் நடந்திருக்கலாம். அதையெல்லாம் யாரும் பெரிதாக நினைக்கக் கூடாது. இந்த முறை அவருக்கு மீண்டும் வாக்களியுங்கள். அந்த குறைகளை சரி செய்வார். தவறு செய்வது மனித இயல்புதானே?
 
தொடர்ந்து ஆட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது” என பேசியுள்ளார்.
 
அப்போது மேடையில் இருந்த மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் என்ன செய்வதென்று புரியாமல் நெளிந்தனர். இவரின் பேச்சு சொந்த கட்சிக்கு சூன்யம் வைப்பதுபோல் ஆயிற்று என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil