Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்: தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (08:23 IST)
கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் வழங்கவிருக்கும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் ஏப்ரல் 24 ஆம் தேதி அதாவது இன்றும் தொடங்கி நாளை வரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த டோக்கன்களில் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டிய தேதி மற்றும் நேரம் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதும், டோக்கன்களை பெற்றவர்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் மட்டுமே குடும்ப அட்டையுடன் வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி டோக்கன் வழங்கும் தேதி ஏப்ரல் 24க்கு பதிலாக மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் எனவும் மே 4 முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நடைமுறையை அனைவரும் சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் ரேஷன் பொருட்களை வாங்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றூம், ரேசன் பொருட்களுக்கு எந்த விலையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்த டோக்கன்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments