சென்னையில் போலி நகைகளை விற்க முயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத். அப்பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஆட்டோவில் வந்த 2 வாலிபர்கள், தாங்கள் 50 சவரன் நகைகளை வைத்திருப்பதாகவும், அதை விற்க வேண்டும் என்றும் கூறினர். அப்போது, நகைகளை சோதனையிட்டு பார்த்த வினோத், போலியானவை என்பதை கண்டுபிடித்தார்.
இதை அறிந்த உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். வினோத் அந்தப் பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன், அந்த 2 பேரையும் பிடித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில்
பழைய பல்லாவரத்தை சேர்ந்த முருகன், அனகாபுத்தூரை சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது, மேலும், அவர்கள் பல இடங்களில் போலி நகைகளை விற்க முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்