Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நதிகாக்கும் இரு கரைகள் தகர்ந்தது! – நமது அம்மா இதழ் ஆசிரியர் விலகல்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (11:53 IST)
நமது அம்மா நாளிதழில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்ட நிலையில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா” இதழில் ஆசிரியராக பொறுப்பில் இருப்பவர் பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கும் இவர் போட்டியிட்டார்.

சமீப காலமாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை விவகாரத்தால் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நமது அம்மா நாளேட்டின் நிறுவனர் என்ற பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தனது ”நமது அம்மா” நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை விட்டு விலகுவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments