Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் மலர் அஞ்சலி

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (06:17 IST)
தமிழகத்தில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி, பலியான 21 தியாகிகளுக்கு பாமக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

 
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, கடந்த 1987ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் நடந்த தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள்.
 
அவர்களது நினைவு தினத்தை, வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் 28ஆவது ஆண்டு நினைவு வீரவணக்க நாள்  திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
 
அப்போது, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படங்களுக்கு,  பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டபலர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

Show comments