Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவன் நடத்தையில் சந்தேகம்: திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கணவன் நடத்தையில் சந்தேகம்: திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
, திங்கள், 15 பிப்ரவரி 2016 (10:31 IST)
சென்னையில் திருமணமான 4 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார், கணவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


 

 
 
சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த முத்துகனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராணிக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முத்துகனி திருமுடிவாக்கத்தில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, மேலும், கணவனுக்கு வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் மனம் உடைந்த மனைவி, தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடைய கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மேலும் ராணிக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகி இருப்பதால் இதுகுறித்து தாம்பரம் ஆர்டிஓ விசாரணை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil