Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தாலி கட்டிய இளைஞர்.. வலைவீசி தேடும் காவல்துறை..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (10:09 IST)
பரபரப்பாக இயங்கி வரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
எந்நேரமும் பிசியாக இருக்கும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் கழிவறை அருகே இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டனர். வாலிபர் ஒருவர் அவசர அவசரமாக தனது காதலிக்கு தாலி கட்டி விட்டு அதன் பின்னர் மாயமாக மறைந்து விட்டார்கள். 
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி யார் என்பதை குறித்து விசாரணை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக காதல் ஜோடிகள் மற்றும் சமூக விரோதிகள் குற்ற நடவடிக்கைகள் ஈடுபொருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் தாலி கட்டி திருமணம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments