Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்: மாரி செல்வராஜ்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். 
 
நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஜாதி ரீதியான மோதல் காரணமாக ஒரு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக  மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான  மாமன்னன் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்கிறார் தனது ட்விட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறி இருப்பதாவது
 
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும் . 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments