Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதநேய மக்கள் கட்சியை பிளக்க திமுக சதி: ஜவாஹிருல்லா பரபரப்பு குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (22:36 IST)
மனிதநேய மக்கள் கட்சியை உடைக்க திமுக சதி செய்வதாக மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தாம்பரத்தில் நடைபெறும் என கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அறிவித்தார். ஆனால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதன் காரணமாக மனிதநேய மக்கள் கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  
பின்பு, தமீம் அன்சாரி சமாதானம் ஆகி, தாம்பரம் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியாத அறிவிக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சி அதிமுக பக்கம் சென்றுவிடும் என்று பயந்து எங்கள் கட்சியை இரண்டாக உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடட்டுள்ளது. அவர்களது கனவு பலிக்காது என ஜவாஹிருல்லா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டுக்கு திமுக இதுவரை பதில் அளிக்கவில்லை. விரைவில் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

Show comments