Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித நேய மக்கள் கட்சியில் திடீர் பிளவு

மனித நேய மக்கள் கட்சியில் திடீர் பிளவு
, திங்கள், 5 அக்டோபர் 2015 (23:44 IST)
மனித நேய மக்கள் கட்சி சார்பில், ஜவாஹிருல்லா கூட்ட உள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்று தமீம் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
 
மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதே போல், தமீம் அன்சாரி தலைமையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இது குறித்து, தமீம் அன்சாரி கூறுகையில், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா கூட்ட உள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது. எனது தலைமையில் நாளை நடக்க உள்ள பொதுக்குழு தான் உண்மையானது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்ட எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil