ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் மணிரத்னம் உள்பட 6 பிரபலங்கள் தேர்வு..!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (10:27 IST)
ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு மணிரத்னம் உள்பட 6 இந்திய பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் தேர்வு குழுவிற்கு மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சில இந்தியர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே கே செந்தில்குமார், தயாரிப்பாளர் கரன்ஜோகர் உறுப்பினர்களாக உள்ளனர் 
 
தமிழகத்திலிருந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ஏற்கனவே ஆஸ்கர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது மேலும் 6 இந்திய பிரபலங்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அண்ணாமலை - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. பாஜகவில் சேருகிறாரா?

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments