Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை ! புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு நேர்ந்த கொடூரம் !

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (07:24 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கட்டாயப் படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் எனும் ஊருக்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அந்த இளைஞருக்கு உறவினர்கள் என யாரும் இல்லை என சொல்லப் படுகிறது. இவரை அப்பகுதியில் உள்ள குவாரி ஒன்றில் வேலைப்பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் பட்டேல் என்ற இளைஞர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

தனுஷ் அந்த இளைஞரை  தனியாக அழைத்துச் செல்வதை சிலர் பார்த்துள்ளனர். அதனால்சந்தேகப்பட்டு அவரை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, தனுஷ் அந்த  மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர் அந்த ஊர் மக்கள். இதையடுத்து அவரைப் போலிஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments