Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தவெள்ளத்தில் நிர்வாணமாகக் கிடந்த உடல் – புதுச்சேரியில் நடந்த கொடூர மரணம் !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:33 IST)
புதுச்சேரியில் தனியாக வாழ்ந்து வந்த தத்துவசாமி எனும் நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பாலாஜி நகர், மொட்டைத் தோப்பு பகுதியில் தத்துவசாமி எனும் நபர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு யாரும் அதிகமாக வந்து போவது இல்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 2 மர்மநபர்கள் வந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு தத்துவசாமிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் கோபத்தில் கத்தியை எடுத்து தத்துவசாமியைக் குத்திவிட்டு தப்பித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அந்த வீட்டின் காவலாளி வீட்டினுள் சென்று பார்த்த போது தத்துவசாமி வீட்டினுள் நிர்வாணமாகக் கொல்லப்பட்டு கிடந்துள்ளார்.

இதையடுத்துப் போலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட உடலைக் கைப்பற்றிய போலிஸார் குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் தீவிரமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments