Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது...வாகனம் பறிமுதல்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (14:32 IST)
சமீபத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  பைக் வீலிங் செய்தாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து,  திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவத்தில்  மொத்தம் 13  பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 7 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் – திருச்சி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட தங்க பாண்டியனை போலீஸார் கைது செய்தனர்.

கரூர்- திருச்சி  நெடுஞ்சாலையில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து பகிர்ந்த திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் ஓட்டிய இரு சக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

தானம் செய்யப்பட்ட பெட்டியில் இருந்து ஆடையை எடுக்க முயன்ற பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

அரசு அதிகாரியை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கிய பாஜக பிரமுகர்.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments