Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்ற வாலிபர் பேருந்துகளுக்கிடையே சிக்கி பலி

Webdunia
புதன், 9 மார்ச் 2016 (11:42 IST)
நாகர்கோவில் ஓடும் பஸ்சிலிருந்து இறங்க முயன்ற வாலிபர் இரு பேருந்துகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தார்.


 

நாகர்கோவில் வடசேரியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பேருந்து ஒன்று அண்ணா பஸ் நிலையத்துக்குள்  நேற்று இரவு வந்தது. அந்த பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது படிக்கட்டில் நின்றிருந்த வாலிபர் இறங்க முயன்றார். அப்போது பேருந்து நிலையத்தின் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்கும், கன்னியாகுமரி செல்லும் பேருந்துக்கும் இடையில் வாலிபர் திடீரென சிக்கிக்கொண்டார். இதைக் கண்ட பேருந்து டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடினார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பேருந்தை இயக்கி அப்புறப்படுத்தினர்.

பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட வாலிபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வாலிபர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments