Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி, மகளைக் காணவில்லை… 10 நாள் கழித்து புகார் கொடுத்த நபர் – போலீஸார் குழப்பம் !

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (11:33 IST)
சென்னையில் தனது மனைவி மற்றும் மகளைக் காணவில்லை என 10 நாட்கள் கழித்துப் புகார் கொடுத்த நபரின் மீது சந்தேகமடைந்த போலிஸார் அவரை விசாரணை செய்துள்ளனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் நேற்று காவல்துறையில் தனது மற்றும் மகளைக் கடந்த 10 நாட்களாகக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமான அவரது புகாரில் ‘ கடந்த 13 ஆம் தேதி எனது தங்கை அலுவல் விஷயமாக சென்னை வந்தார். அவருக்குத் துணையாக எனது மனைவி மற்றும் 5 வயது மகள் அவரோடு சென்றனர். ஆனால் திரும்பி வரும்போது எனது தங்கை மட்டுமே ஆட்டோவில் வந்தார். எனது மனைவியும் மகளும் திரும்பவில்லை. அவர்களைக் காணாமல் 10 நாட்களாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை’ எனப் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை ஏற்றப் போலீஸார் 10 நாட்களாக ஏன் புகார் கொடுக்கவில்லை என அவரிடம் கேள்வி எழுப்ப அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் அவரையும் போலிஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவரது மனைவிக்கு வேறு ஏதேனும் காதல் விவகாரம் உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments