Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை நிர்வாணமாக சித்தரித்த வாலிபர்: போலீஸில் கைது

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (18:19 IST)
திருவண்ணாமலை அருகே பெண்ணை நிர்வாண்மாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை பள்ளிகொண்டாப்பட்டு சம்பந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன். 37 வயதான இவர், 35 வயதான ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

அந்த பெண்ணை பாலியல் ரீதியாக பல முறை தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த செயலுக்கு நரேந்திரனின் மனைவியும் துணை புரிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து நரேந்திரன், அந்த பெண்ணின் புகைப்படத்தை, கணிணி தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து வாட்ஸ ஆப், டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார்.

இதனை அறிந்து கோபமுற்ற பெண், நரேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நரேந்திரனும் அவரது மனைவியும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கினர். இனிமேல் வாக்குவாதம் செய்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் குடுத்துள்ளார் அந்த பெண். அதன் பின்பு அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நரேந்திரனை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான நரேந்திரனின் மனைவியை திருவண்ணாமலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்