Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவு பூசிய நபர் கைது !

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:01 IST)
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும்  ஒரு முதாட்டியின்  மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லைகொடுத்த  கிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  காடையாம்பட்டி தாலூக்கா  கொங்குபட்டி ஊராட்சியில் உள்ள  கொத்தப்புளியனூர்  என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பாயி(90). இவரிடம் அதே கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் ஆபாசமாகப் பேசியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சைய்பத்தில் மூதாட்டி பாப்பாயி படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில்,ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார்.

இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.  இதையடுத்து, கிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணி வேணும்! அன்புமணியும், சௌமியாவும் கதறி அழுதார்கள்! - ராமதாஸ் சொன்ன சம்பவம்!

அரசியலில் நம்பிக்கை முக்கியம்.. சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்: பிரேமலதா

மாணவர்களுக்கு தங்க காசு, வைர மோதிரம்.. கோலாகலமாக நாளை விஜய் விழா..!

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments