Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொன்றுவிட்டு பாம்பு கடித்ததாக நாடமாடிய நபர் கைது !

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (23:10 IST)
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள தோனிரேவு என்ற பகுதியில் வசித்து வருபவர்  நைனியப்பன். இவரது மகள் சீவரஞ்சினிக்கும் பிரவீன் குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இருவர்கள் இருவரும் திருப்பாலைவனம் பகுதியில் ஒராண்டாக வசித்து வந்தனர். இந்நிலையில்  பிரவீன்குமார் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மனைவியை பாம்பு கடித்து இறந்துவிட்டதாக பிரவீன் குமார் நைனியப்பனிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் போலீஸில், தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், தன் காதல்மனைவியைத் தலையணையை முகத்தில் அமுக்கிக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

தற்போது அவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்த்கு சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments