கூட்டணிக்கு வாருங்கள்: ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (08:15 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் மட்டுமே ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதன் கூட்டணி கட்சிகளே கழட்டிவிட தயாராக உள்ளனர். தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, அந்த கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணி அமைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து நேற்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி  தொலைபேசியில் பேசினார். அப்போது தேசிய அளவில் அமைக்கவிருக்கும் 3வது அணியில் திமுக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இந்த புதிய கூட்டணியில் திமுக இணையுமா? அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments