Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரம் கடற்கரையில் மீனவர் வெட்டிக் கொலை! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:45 IST)
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லப்புரம் மீனவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அசோக். மீனவரான இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தார். இரவு நேரங்களில் சில சமயங்களில் அசோக் கடற்கரையில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவ்வாறாக அவர் கடற்கரையில் தூங்கியுள்ளார். காலையில் மீன்பிடிக்க மீனவர்கள் கடற்கரை பகுதி வந்தபோது அசோக் பல இடங்களில் வெட்டப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அசோக்கின் உடலை கூராய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக் கொலைக்கு தனி பகை காரணமா? அல்லது சுற்றுலா வந்த மதுபோதை ஆசாமிகள் யாரும் அசோக்கை கொன்றார்களா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments