Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி நினைவு தினம்..! காந்திக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் - தமிழக ஆளுநர்

Senthil Velan
செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:43 IST)
மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அமைச்சர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சத்தியம், அகிம்சை, எளிமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது இலட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவை உருவாக்குகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: சட்டப்பேரவையை முற்றுகையிட்ட நரிக்குறவ மக்கள்.! போலீசார் அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு..!!
 
மேலும் உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டுள்ளார்.
 
இதனிடையே காந்தியின் நினைவு நாளை ஒட்டி, திமுக தலைமை அலுவலகத்தில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments