Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; மாஸ்க் கட்டாயம்! – திடீர் உத்தரவு!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (11:06 IST)
இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்பியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன. முக்கியமாக மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments