Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; மாஸ்க் கட்டாயம்! – திடீர் உத்தரவு!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (11:06 IST)
இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்பியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன. முக்கியமாக மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments