Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரவாயல், ராயபுரம் தொகுதிகளில் கனிமொழி போட்டியிட விருப்ப மனு தாக்கல்

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2016 (15:21 IST)
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மதுரவாயல் மற்றும் ராயபுரம் ஆகிய தொகுதிகளில் கனிமொழி போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


 

 
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
 
இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரில்தான் அதிக அளவு விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன.
 
இந்நிலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரில் பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஆலந்தூர், திருப்போரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இவருடன் மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் வந்திருந்து மனுதாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
இந்நிலையில், கனிமொழி ராயபுரம் தொகுதியில் போட்டியிட உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சசிகுமார் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இதே போல, மதுரவாயல் தொகுதியில் கனிமொழி போட்டியிட வலியுறுத்தி மதுரவாயல் பகுதி துணை செயலாளர் ரமேஷ் ராஜ் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

Show comments