Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுராந்தகத்தில் இளம்பெண்னைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள்

மதுராந்தகத்தில் இளம்பெண்னைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள்
, சனி, 27 டிசம்பர் 2014 (11:39 IST)
மதுராந்தகம் பகுதியில் இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க, மதுராந்தகத்தை அடுத்துள்ள சின்ன கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், இரவு வேளையில் கடைக்குச் சென்றுள்ளார்.
 
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வீரராகவன் என்பவரது மகன் 25 வயதுடைய முருகன், அவரது நண்பர் சண்முகத்தின் மகன் 25 வயதுடைய ஜெகன் ஆகியோர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று, அருகில் உள்ள வயல் வெளியில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இக்நிலையில் அந்தப் பெண்ணின் தாய், இது குறித்து மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
இந்தப் புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜெகன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil