கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்: கொரோனாவால் பரிதாபம்

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:45 IST)
கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்
அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தற்போது மதுரையில் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார் 
 
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கப்பலில் பணி புரிந்து வந்தவர் மதுரையைச் சேர்ந்த சரவணன். கப்பலில் உள்ள கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கிடைத்த விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதன் பின் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீண்டும் அவர் அமெரிக்காவுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது
 
இந்த நிலையில் வேலையின்றி வருமானம் இன்றி இருந்த சரவணன் மதுரையில் நடமாடும் கரும்புச்சாறு கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கரும்புச்சாறு கடை மூலம் தனக்கு தினமும் 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் இதை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார் 
 
இனிமேல் அமெரிக்கா செல்லப் போவதில்லை என்று கூறிய சரவணன் மதுரையிலேயே மேலும் பல கிளைகளை உருவாக்கி பல இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments